Tuesday, November 26, 2019

கொசுறு காலாச்சாரம்

 நினைத்தேன் எழுதுகிறேன்......

ஹிந்து என்பதில் பெருமிதம் கொள்வதில் என்ன தவறு?

இன்றைய சூழ் நிலையில் ஒருவர் தன்னை ஹிந்து என்று பெருமிதத்துடன் சொல்லிக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால் இது போன்ற கருத்தைச் சொல்வதால் சமூகத்தில் நம்மை வகுப்புவாதி என்று முத்திரைக் குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு பலர் தங்களை நடு நிலை வாதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஒரு விதமான கோட்பாடு திட்டமிட்ட ரீதியில் பரப்பப் பட்டு வருகிறது.... அது என்ன? தமிழன் என்பதும் ஹிந்து என்பதும் வேறு வேறு... இந்தப் பொய் பிரச்சாரத்திற்கு மயங்கி பல இளைஞர்கள் தமிழனுக்கும் ஹிந்துவிற்கும் சம்பந்தமில்லை. அது தனி தனி என்று நம்ப வைக்கப்படுகிறார்கள்.

முறையே இந்த வாதம் சரியா? என்று யாரும் யோசிப்பதில்லை. மொழிவாரி மா நிலமாக பிரிக்கப் பட்ட பின்பு தான் தமிழ் நாடு என்ற பெயர் நாம் வாழும் மா நிலத்திற்கு வந்தது. அப்படி என்றால் தமிழ் மொழிக்கும் ஹிந்து கலாச்சாரத்திற்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா? சில உதாரணங்களைப் பார்ப்போம்........

கொசுறு  கலாச்சாரம்......

முன்பெல்லாம் தெருத்தெருவாக காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்வார்கள். ( இப்போதெல்லாம் பழமுதிர் நிலையங்களும் மால்களும் அந்த இடத்தைப் பிடித்து விட்டன) அப்படி வரும் வியாபாரியிடம் ஒரு கிலோ வெண்டைக்காய் வாங்கினால் ஒரு கிலோவிடன் சேர்த்து கடைசியாக கொஞ்சம் வெண்டைகாயை சேர்த்துக் கொடுப்பார்கள். இதற்கு கொசுறு என்று பெயர்... இந்த தன் நிலை விளக்கத்தைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் தள்ளப் பட்டிருக்கிறோம் என்பது வேதனையிலும் வேதனை.... ஏன் என்றால் இன்றைய இளம் தலைமுறையினருக்கு இது தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே.....

இப்படி தெருவில் வரும் வியாபாரிகள் அன்போடு ஒவ்வொரு வாடிக்கையாளரைப் பற்றியும் அவர்கள் வீட்டில் உள்ளோரைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பர்..... என் வீட்டிற்கு ஒரு கீரை காரம்மா (பெயரே கீரக் காரம்மா தான்....உண்மை பெயர் தெரியாது) கீரை கொண்டு வந்து கொடுப்பர். ஒரு முறை என் அத்தைக்கு வாய் புண் வந்து மிகவும் அவதிப்பட்டார். அடுத்த நாள் அந்த கீரைக்காரம்ம மணத்தக்காளி கீரையைக் கொண்டு வந்து கொடுத்தார்..... இதே போல் வாத நாராயணக் கீரை ஒரு நாள் கொண்டு வந்துக் கொடுத்தார் (என் பாட்டியின் வாத நோய்க்காக) பிறிதொருமுறை முடக்கத்தான் கீரை (அம்மவின் மூட்டு வலிக்காக).... இதை இப்போது நினைத்து பார்க்கிறேன்.. இந்த இனம் புரியாத கீரைக்காரியின் அன்பு யார் சொல்லி வந்தது.... இது நம் கலாச்சாரம் சார்ந்த விஷயம் தானே? இந்தப் பழக்கம் அயல் நாட்டில் இருந்தா வந்தது? இது தானே நம் மண்ணின் மரபு.... இப்போதிருக்கும் பழமுதிர் நிலையங்களில் இதைப் போன்ற அன்பை எதிர்பார்க்கத் தான் முடியுமா?

கொசுறு தான் தருவார்களா? பழத்தை எண்ணிக்கையில் வாங்கியது ஒரு காலம்.... இப்போது எடை தான் எல்லாமே.....

இந்த கொசுறு கலாச்சாரம் நம் தமிழ் மண்ணிற்கு மட்டுமே உரித்தானதா?   இல்லை.....
ஆந்திராவில், கர்னாடகாவில், மஹாராஷ்ட்ரத்தில், பஞ்சாபிலும் கூட இந்த கொசுறு கலாச்சாரம் இருக்கிறது.....

பாமர மக்களிடையே உள்ள பழக்க வழக்கம் தான் கலாச்சாரம். இது எப்படி நம் நாடு முழுமைக்கும் ஒரே பழக்க வழக்கம் இருக்க முடியும் என்று கேள்வி கேட்பவர் எத்தனை முட்டாளாக இருப்பார்...... அதற்கு ஒரு சான்றே கொசுறு கலாச்சாரம்....

இது போன்ற பல இயற்கையான சான்றுகளை வரும் பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராகு

Sunday, September 17, 2017

ரோஹிங்யா முஸ்லீம்

ரோஹிங்யா முஸ்லீம் மக்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?


மியான்மரிலிருந்து இது வரை (அரசு கணக்குப் படி 40000 ரோஹிங்யா முஸ்லீம் மக்கள் அகதிகளாக நம் நாட்டிற்கு வத்துள்ளனர். தற்பொழுது இவர்களை இந்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் குரல் கொடுக்கின்றனர்.. இது சரியா? 

நாடு விடுதலை அடைந்த போது இதே நிலைமைதான் காஷ்மீரத்தில் இருந்தது. காஷ்மீரத்தில் தனி நாடு கேட்டு காஷ்மீர் முஸ்லீம்கள் போராட்டம் நடத்தினர். இந்த தீவிரவாதிகளுக்கு, நாம் முஸ்லீம் மக்களுக்கென்றெ பிரத்யேகமாக பிரித்து கொடுத்த தனி நாடான பாகிஸ்தான் ஆதரவு கொடுத்து புகலிடம் தந்தது. இன்றும் அதற்கான விலையை(மும்பை தாக்குதல், காஷ்மீரில் பல இடங்களில் குண்டு வெடிப்பு, பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள நம் காஷ்மீரத்தின் நிலப் பகுதி, காஷ்மீர் ஹிந்து பண்டிட்டுகள் தம் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்க்கை நடத்தும் கொடுமை.. இன்னும் பல)   கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம்…. நாம் எப்படி பாகிஸ்தானை ஒரு பகை நாடாக பார்க்கிறோமோ அதே போல் மியன்மரும் நம்மை பகை நாடாக பார்க்க நாம் ஒரு சந்தர்ப்பத்தை ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு புகலிடம் கொடுப்பதால் ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறோமா?

இரண்டாவது… இது மியான்மரின் உள் நாட்டு பிரச்னை.. நம் நாட்டில் ஆயிரம் பிரச்னை இருக்கும் போது புதியதாக  இன்னொரு பிரச்னை ஒன்று தேவையா?

மூன்றாவது…. மனிதாபினாம் அடிப்படையில் புகலிடம் கொடுப்பது தானே தர்மம். ஏன் அதை எதிர்க்க வேண்டும்? நல்ல கேள்வி… இன்று 40000 பேர்களாக இருக்கும்(2017 மார்ச் கணக்கின் படி) ரோஹிங்யா முஸ்லீம்கள் இன்னும் 20 ஆண்டுகளில் கணிசமான மக்கள் தொகையாக பெருக்கம் அடையும். அப்போது நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கு ஒரு தீராத தலைவலியாக இந்த பிரச்னை உருவெடுக்கும்… நம் வருங்கால சந்ததிகளின் அமைதியைக் கருத்தில் கொண்டு இவர்களை நம் நாட்டில் அனுமதிக்காமல் இருப்பதே நம் அனைவருக்கும் நலம்.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளான பங்களாதேஷ், இந்தோனேசியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா ஆகிய எந்த நாடும் ரொஹிங்யா முஸ்லீம் அகதிகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஏன்? அனைவரும் இஸ்லாமியர்கள் தானே?

பிரச்னை என்ன? ஏன் இவர்கள் இந்த நிலையை எடுக்கிறார்கள்? புகலிடம் கொடுப்பது அனாவசியமானது என்று இந்த நாட்டின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். எந்த ஒரு இஸ்லாமிய அமைப்பும் இதைக் கண்டிக்கவும் இல்லை. ஏன் என்றும் இது வரை கேட்கவில்லை ஐ நா சபையைத் தவிர……

ஆனால் நம் நாட்டில் உள்ள எதிர்க் கட்சிகள் ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு ஆதரவு தந்து புகலிடம் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது. இங்கு இருக்கும் எதிர் கட்சிகள் ஓட்டு அரசியலுக்காக ஆதார் அடையாள அட்டை முதல் வாக்காளர் அடையாள அட்டை வரை ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு தவறான நோக்கத்தோடு வழங்க உதவி செய்கிறார்கள். இது தேச துரோகம் அல்லவா? ஏற்கனவே மதத்தின் பெயரால் நம் நாட்டின் இரண்டு பெரு நிலப்பரப்புகளை இழந்தோம் - பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்…. இன்னும் நம் நாடு மீண்டும் ஒரு பிரிவினையை சந்திக்க வேண்டுமா? இந்த் இருக்கும் இஸ்லாமியர்கள் ரோஹிங்யா முஸ்லீம்கள் பற்றி மத ரீதியாக கவலைப் படுவார்களேயானால் ஏன் இவர்கள் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளைக் கேட்க மறுக்கிறார்கள்? சிந்தியுங்கள்….


Tuesday, December 22, 2015

யூரியாவின் கதை.......

புதுசா மழை பெஞ்சா அதென்னா செடி கொடி எல்லாம் ஜம்முன்னு வரது?
காத்தில 78% நைட்ரஜன் இருக்கு என்கிறது தெரிஞ்சதுதானேமழை பெய்யறப்ப அது இந்த நைட்ரஜனையும் கூட சேர்த்துக்கொண்டு யூரிக் ஆசிடை உருவாக்கறதுஇது இயறகையா வர யூரிக் ஆசிட்அது இலைகளின் மேலே ஒரு ஸ்ப்ரே அடிச்ச மாதிரி தங்கிடுதுஇதை உறிஞ்சி செடி ஊக்கம் பெறும்உடனே பச்சையம் (க்லோரோபில்அதிகமாகும்.செடி கொடி எல்லாம் பச்சைப்பசேல்ன்னு இருக்கும்இதுதான் அட்மாஸ்பியர் செடி களுக்கு செய்யறது.
பின்னே யூரியா போடறதை தப்புன்னு சொல்றீங்க?
ஆமாம்கடையில விக்கிற யூரியால 40% தான் யூரியா மீதி என்னடான்னு கேட்டுப்பாருங்கஎவனும் வாயை திறக்க மாட்டேங்கறான்பில்லர் என்கிறாங்கசரிஅந்த பில்லர் என்னஅது செடி கொடுகளுக்கு நல்லதான்னு கேட்டா பதில் வராது.
இந்த யூரியா மார்கெட்டுக்கு வந்த கதையே பலருக்கும் தெரியாது.
இரண்டாம் உலகப்போர் அப்ப ஹிட்லர் அமேரிக்கா செஞ்சுகிட்டு இருந்த ஹைட்ரஜன் பாம் க்கு எதிரா ஆயுதம் தயாரிக்க உத்தரவு போட்டான்ஜெர்மன் விஞ்ஞானிகள் எல்லாம் சேந்து ஆராய்ச்சி செஞ்சு ’நைட்ரஜன் பாம்’ செய்ய திட்டம் போட்டாங்கஅதுக்கு நிறைய லிகர் ஆஃப் அம்மோனியாஅம்மோனியம் ஹைட்ராக்ஸைட்தேவையா இருந்ததுஅதை தயாரிக்க நிறையவே மின்சாரமும் தேவைப்பட்டதுஅதனால நதிக்கரையோரம் இருந்த பல மின் நிலையங்கள் பக்க்த்தில இதுக்காக பாக்டரி அமைச்சாங்கஏராளமான அளவு தயாரும் ஆச்சுஆனா அந்த சமயத்தில உலகப்போர் முடிவுக்கு வந்துடுத்துஜெர்மனியை ரஷ்யாவும் மத்த நாடுகளும் பங்கு போட்டுக்கொண்டனஸ்டாக் எடுத்தப்ப இந்த மாதிரி நிறைய அம்மோனியம் ஹைட்ராக்ஸைட் இருக்கறது தெரிஞ்சதுஇதை என்ன செய்யறது?
யூரியாவா தயார் செஞ்சு உரமா விக்க முடிவு பண்ணாங்கஇந்த நேரத்தில ஐரோப்பியர்கள் இந்தியர்களை பாத்து இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருந்தாங்கஅதை மாத்த முடியலைசரி இதை எப்படியாவது மூணாவது உலக நாடுகள்ல ‘டம்ப்’ செஞ்சுடுவோம்ன்னு முடிவு பண்ணி ஆப்பிரிக்கா இந்தியாவில எப்படியாவது தலையில கட்ட நினைச்சாங்கஇதுக்கு அப்ப இருந்த ப்ரிட்டிஷ் அரசு அரசுத்துறை மூலமாவே ப்ரமோட் பண்ணாங்கரகசியமா ராத்திரியோட ராத்திரியா ஒரு வயல்ல யூரியாவை போட்டு அடுத்த வயல்ல போடாம வ்ட்டுடுவாங்கரெண்டு வாரம் கழிச்சுப்பாத்தா யூரியா போட்ட வயல்ல இருந்த பயிர் எல்லாம் பச்சைப்பசேல்ன்னு ஆயிருக்கும்அடுத்த வயல்ல சாதாரணமா இருக்கும்விவசாயி இதென்னடான்னு குழம்பி இருக்கறப்ப இவங்க போய் தோ பார்இதுக்கு மருந்து போட்டா சரியாயிடும்தொரை வெச்சு இருக்கான் போய் வணக்கம் பண்ணி வாங்கிக்கன்னு அனுப்புவான்இப்படியாக யூரியா விறபனை ஆச்சுரசாயன் உரம் வந்ததும் விவசாயிக்கும் நிலத்துக்கும் இருக்கிற தொடர்பு கொஞ்சம் கொஞ்சமா அறுந்து போக ஆரம்பிச்சதுஇதான் யூரியாவின் கதை.

Sunday, May 31, 2015

ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் - 9001:2008 - ஒரு கண்ணோட்டம்

ஐ.எஸ்.ஓ 9001:2008 தரச் சான்றிதழ்

தரத்திற்கான சர்வ தேச சான்றிதழ் என்பது 9001:2008 என்று அழைக்கப்படுகிறது. இதில் தரத்திற்கான பல்வேறு தேவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இன்றைய காலகட்டத்தில் நுகர்வோர் தரமான பொருளையே வாங்க விரும்புகின்றனர். தரம் என்பது ஒவ்வொரு பொருளின் குணத்தில் ஒன்றாகக் காணப்படுகிறது. இதில் பொருள் மட்டுமல்ல சேவையும் சேர்ந்து விடுகிறது. ஒரு உணவகத்திற்கு சாப்பிட செல்கிறோம். அங்கு தரமான உணவு கிடைத்தால் மட்டும் நாம் திருப்தி அடைவதில்லை. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் நம்மை பணிவோடு உபசரித்து நமக்குத் தேவையான உணவை கனிவோடு பரிமாறுகிறார்களா? என்றும் நாம் பார்க்கிறோம். இதைத் தான் சர்வதேச ஐ.எஸ்.ஓ நிறுவனம் “சேவை” என்று அழைக்கிறது.

வாடிக்கையாளரின் தேவையை அறிந்து ஒரு பொருளையோ அல்லது சேவையை தரமாக அளிப்பது ஒவ்வொரு நிறுவனத்தின் கடமையாகும். 

Tuesday, April 14, 2015

என் முதல் கவிதை

என் முதல் கவிதை..........
(பள்ளி ஆண்டு மலருக்காக 1985ல் எழுதியது)

கம்ப்யூட்டர் என்னும் சாதனமாம்
கணக்கை எளிதே தீர்த்திடுமாம்
சிக்கல்கள் பலவே இருந்தாலும்
சில நொடிகளிலே காட்டிடுமாம்
விடை தெரியாத வினாக்களுக்கும்
விரைவே விடையைத் தந்திடுமாம்
இந்நூற்றாண்டின் கலைச்செல்வம்
இனிதே இதனை வளர்ப்போமே!

Thursday, April 9, 2015

பொய் முகங்கள்

பொய் முகங்கள்.............................................

கவலையின்றி களிப்புடனே
துள்ளிக் குதித்து விளையாடிய
பள்ளி பருவ நாட்களிலே
மனதில் பட்டவற்றை
“பட்” டென சொல்லி விட்டேன்
தப்பாக நினைக்கவில்லை
பத்தாம் வகுப்பு நுழைந்தவுடன்
“பாடம் படிக்கவில்லை” என்று கூறும்
நான் பார்த்த நண்பர்களின்
முதல் “பொய் முகங்கள்”
முதன் முதலாய் கண்டேன் நான்
உற்ற நண்பர்களின்...........
பொய் முகங்களின்
உண்மையான தோற்றத்தை.................
உண்மையை மறைப்பதற்கு
உலகம் கொடுத்த பெயர்
“சாமர்த்தியம்”

சாமானியனின் உண்மை முகம்
சாமர்த்தியமாய் செயல்பட்டால்
கிடைக்கின்ற பரிணாமம்
“பொய் முகங்கள்”

உற்றாரும் மற்றாரும்
நண்பர்களும் நண்பிகளும்
உள்ள இந்த சமுதாயத்தின்
பொய்யான முகத்தைக் கண்டு
மனம் பொங்கியது........வெம்பியது.......

வறுமையிலே வெறுமையிலே
கடந்து வந்த இளமை நாட்கள்
பொய் முகத்தின் முகவரியை
இவ்வையகத்தில் காட்டியது.


’குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை”
என் தந்தை எனக்களித்த உபதேசம்
பொய் முகத்தை சகித்துக் கொள்ள
என் மனதைத் தயார் செய்த மூல மந்திரம்.

கல்லூரி வாழ்க்கையிலே
கள்ளமில்லா மனம் கொண்ட
நண்பர்கள் கிடைத்தமைக்கு
 நான் சொன்னேன் நன்றி கோடி
ஆத்மார்த்தமான அன்பின்
முகவரியே “உண்மை முகம்”

வேலையில்லா பட்டதாரி
வேலை தேடி அலைந்த்திட்டேன்
தேவையான தகுதிகளில்
அறிந்து கொண்டேன்
“பொய் முகமும்” ஒன்று என்று..........

முருகனுடைய திருவருளால்
முயற்சிகளின் பலனாக
முன்ணனி நிறுவனத்தில்
முதல் பணியில் சேர்ந்திட்டேன்.......

பதவிகளும் பல பெற்று
வாழ்க்கைத் தரம் முன்னேற
பல வண்ணக் கனவோடு
பணி நாளைத் துவங்கிட்டேன்.

புத்தம் புதிய சூழ் நிலையில்
நித்தம் ஒரு அனுபவம் தான்......
பொய் முகத்தின் குவியல்களில்
உண்மை முகம் புதைந்த்தனவே!

நெஞ்சு நிமிர்த்தி கருத்துச் சொன்னால்
 நஞ்சுமிழ்ந்த பொய் முகங்கள்
வஞ்சமில்லா எனது மனம் - நய
வஞ்சகத்தை புரிந்து கொள்ளாதது ஏனோ?

மெய் என்று பொய் முகத்தை
நம்பி நம்பி மனம் நொந்தேன்.....
உண்மைதனை உரக்க உரைத்ததினால்
ஊதியத்தில் உயர்வு இல்லை
ஊமையாகிப் போனேன் நான்............
பொருல் இல்லார்க்கு இவ்வுலகமில்லை
வள்ளுவன் வாக்கு சத்தியமன்றோ?
பொருளில்லா உலகத்தில்
உண்மை முகத்திற்கு மதிப்பு எங்கே? உயர்வு எங்கே?

வாழ்க்கை கல்வியிலே
உண்மை முகம் புதைத்துக் கொண்டு
பொய் முகத்தை மாட்டிக் கொள்ள
கற்கவில்லை.......கற்கவில்லை.......

அதனால் தான் இச்சமூகம்
“சிரிக்கின்ற வில்லன்” என்றும்
“புரட்சிக்கார குசும்பன்” என்றும்
”திமிர் பிடித்த வம்பன்” என்றும்
பட்டங்களைச் சூட்டியது.

 நொடிக்கொருதரம் பொய் முகத்தை
அடிக்கல்லாய் அணிந்திட்ட அனைவருமே
படிப்படியாய் முன்னேறும் காட்சியினால்
மடிந்த்ததுவோ? உண்மை முகம்
வடித்துக் கொண்டே கண்ணிரை...............


Tuesday, April 7, 2015

 நினைத்தேன் எழுதுகிறேன்................

கதை சொல்வது......கதை கேட்பது இந்த இரண்டுமே இன்றைய காலகட்டத்தில் மிகவும் அரிதாகிவிட்டது.  என்னுடைய சிறு வயதில் பாஸ்கர் அண்ணன் கதை சொல்வது தான் நினைவிற்கு வருகிறது.

ராணிமுத்து காமிக்ஸ் , ஒற்றைக்கண் மாயாவி,  அம்புலிமாமா, கோகுலம், இந்திரஜால் காமிக்ஸ், போன்ற புத்தகத்தில் வரும் கதைகள் மிகப் பிரபலம். இதில் ராஜா ராணி கதை, துப்பறியும் கதை, குடியானவன் கதை போன்ற கதைகள் அடங்கும்.

ஆனால் பாஸ்கர் அண்ணா சொல்லும் கதை மாதக் கணக்கில் செல்லும். அவர் கதை சொல்லும் பாங்கு, இனம் புரியாத சந்தோஷத்தையும் சுவாரஸ்யத்தையும் கொடுக்கும்.

 நாங்கள் சிறுவர் சிறுமியர் என்று பல வயதினரும் கதை கேட்கும் குழுவில் அடக்கம்.

சிறு வயது நினைவுகளை அசை போடுவதில் என்ன ஒரு புத்துணர்ச்சி..........