Tuesday, April 7, 2015

 நினைத்தேன் எழுதுகிறேன்................

கதை சொல்வது......கதை கேட்பது இந்த இரண்டுமே இன்றைய காலகட்டத்தில் மிகவும் அரிதாகிவிட்டது.  என்னுடைய சிறு வயதில் பாஸ்கர் அண்ணன் கதை சொல்வது தான் நினைவிற்கு வருகிறது.

ராணிமுத்து காமிக்ஸ் , ஒற்றைக்கண் மாயாவி,  அம்புலிமாமா, கோகுலம், இந்திரஜால் காமிக்ஸ், போன்ற புத்தகத்தில் வரும் கதைகள் மிகப் பிரபலம். இதில் ராஜா ராணி கதை, துப்பறியும் கதை, குடியானவன் கதை போன்ற கதைகள் அடங்கும்.

ஆனால் பாஸ்கர் அண்ணா சொல்லும் கதை மாதக் கணக்கில் செல்லும். அவர் கதை சொல்லும் பாங்கு, இனம் புரியாத சந்தோஷத்தையும் சுவாரஸ்யத்தையும் கொடுக்கும்.

 நாங்கள் சிறுவர் சிறுமியர் என்று பல வயதினரும் கதை கேட்கும் குழுவில் அடக்கம்.

சிறு வயது நினைவுகளை அசை போடுவதில் என்ன ஒரு புத்துணர்ச்சி..........

No comments:

Post a Comment