Tuesday, December 22, 2015

யூரியாவின் கதை.......

புதுசா மழை பெஞ்சா அதென்னா செடி கொடி எல்லாம் ஜம்முன்னு வரது?
காத்தில 78% நைட்ரஜன் இருக்கு என்கிறது தெரிஞ்சதுதானேமழை பெய்யறப்ப அது இந்த நைட்ரஜனையும் கூட சேர்த்துக்கொண்டு யூரிக் ஆசிடை உருவாக்கறதுஇது இயறகையா வர யூரிக் ஆசிட்அது இலைகளின் மேலே ஒரு ஸ்ப்ரே அடிச்ச மாதிரி தங்கிடுதுஇதை உறிஞ்சி செடி ஊக்கம் பெறும்உடனே பச்சையம் (க்லோரோபில்அதிகமாகும்.செடி கொடி எல்லாம் பச்சைப்பசேல்ன்னு இருக்கும்இதுதான் அட்மாஸ்பியர் செடி களுக்கு செய்யறது.
பின்னே யூரியா போடறதை தப்புன்னு சொல்றீங்க?
ஆமாம்கடையில விக்கிற யூரியால 40% தான் யூரியா மீதி என்னடான்னு கேட்டுப்பாருங்கஎவனும் வாயை திறக்க மாட்டேங்கறான்பில்லர் என்கிறாங்கசரிஅந்த பில்லர் என்னஅது செடி கொடுகளுக்கு நல்லதான்னு கேட்டா பதில் வராது.
இந்த யூரியா மார்கெட்டுக்கு வந்த கதையே பலருக்கும் தெரியாது.
இரண்டாம் உலகப்போர் அப்ப ஹிட்லர் அமேரிக்கா செஞ்சுகிட்டு இருந்த ஹைட்ரஜன் பாம் க்கு எதிரா ஆயுதம் தயாரிக்க உத்தரவு போட்டான்ஜெர்மன் விஞ்ஞானிகள் எல்லாம் சேந்து ஆராய்ச்சி செஞ்சு ’நைட்ரஜன் பாம்’ செய்ய திட்டம் போட்டாங்கஅதுக்கு நிறைய லிகர் ஆஃப் அம்மோனியாஅம்மோனியம் ஹைட்ராக்ஸைட்தேவையா இருந்ததுஅதை தயாரிக்க நிறையவே மின்சாரமும் தேவைப்பட்டதுஅதனால நதிக்கரையோரம் இருந்த பல மின் நிலையங்கள் பக்க்த்தில இதுக்காக பாக்டரி அமைச்சாங்கஏராளமான அளவு தயாரும் ஆச்சுஆனா அந்த சமயத்தில உலகப்போர் முடிவுக்கு வந்துடுத்துஜெர்மனியை ரஷ்யாவும் மத்த நாடுகளும் பங்கு போட்டுக்கொண்டனஸ்டாக் எடுத்தப்ப இந்த மாதிரி நிறைய அம்மோனியம் ஹைட்ராக்ஸைட் இருக்கறது தெரிஞ்சதுஇதை என்ன செய்யறது?
யூரியாவா தயார் செஞ்சு உரமா விக்க முடிவு பண்ணாங்கஇந்த நேரத்தில ஐரோப்பியர்கள் இந்தியர்களை பாத்து இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருந்தாங்கஅதை மாத்த முடியலைசரி இதை எப்படியாவது மூணாவது உலக நாடுகள்ல ‘டம்ப்’ செஞ்சுடுவோம்ன்னு முடிவு பண்ணி ஆப்பிரிக்கா இந்தியாவில எப்படியாவது தலையில கட்ட நினைச்சாங்கஇதுக்கு அப்ப இருந்த ப்ரிட்டிஷ் அரசு அரசுத்துறை மூலமாவே ப்ரமோட் பண்ணாங்கரகசியமா ராத்திரியோட ராத்திரியா ஒரு வயல்ல யூரியாவை போட்டு அடுத்த வயல்ல போடாம வ்ட்டுடுவாங்கரெண்டு வாரம் கழிச்சுப்பாத்தா யூரியா போட்ட வயல்ல இருந்த பயிர் எல்லாம் பச்சைப்பசேல்ன்னு ஆயிருக்கும்அடுத்த வயல்ல சாதாரணமா இருக்கும்விவசாயி இதென்னடான்னு குழம்பி இருக்கறப்ப இவங்க போய் தோ பார்இதுக்கு மருந்து போட்டா சரியாயிடும்தொரை வெச்சு இருக்கான் போய் வணக்கம் பண்ணி வாங்கிக்கன்னு அனுப்புவான்இப்படியாக யூரியா விறபனை ஆச்சுரசாயன் உரம் வந்ததும் விவசாயிக்கும் நிலத்துக்கும் இருக்கிற தொடர்பு கொஞ்சம் கொஞ்சமா அறுந்து போக ஆரம்பிச்சதுஇதான் யூரியாவின் கதை.

Sunday, May 31, 2015

ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் - 9001:2008 - ஒரு கண்ணோட்டம்

ஐ.எஸ்.ஓ 9001:2008 தரச் சான்றிதழ்

தரத்திற்கான சர்வ தேச சான்றிதழ் என்பது 9001:2008 என்று அழைக்கப்படுகிறது. இதில் தரத்திற்கான பல்வேறு தேவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இன்றைய காலகட்டத்தில் நுகர்வோர் தரமான பொருளையே வாங்க விரும்புகின்றனர். தரம் என்பது ஒவ்வொரு பொருளின் குணத்தில் ஒன்றாகக் காணப்படுகிறது. இதில் பொருள் மட்டுமல்ல சேவையும் சேர்ந்து விடுகிறது. ஒரு உணவகத்திற்கு சாப்பிட செல்கிறோம். அங்கு தரமான உணவு கிடைத்தால் மட்டும் நாம் திருப்தி அடைவதில்லை. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் நம்மை பணிவோடு உபசரித்து நமக்குத் தேவையான உணவை கனிவோடு பரிமாறுகிறார்களா? என்றும் நாம் பார்க்கிறோம். இதைத் தான் சர்வதேச ஐ.எஸ்.ஓ நிறுவனம் “சேவை” என்று அழைக்கிறது.

வாடிக்கையாளரின் தேவையை அறிந்து ஒரு பொருளையோ அல்லது சேவையை தரமாக அளிப்பது ஒவ்வொரு நிறுவனத்தின் கடமையாகும். 

Tuesday, April 14, 2015

என் முதல் கவிதை

என் முதல் கவிதை..........
(பள்ளி ஆண்டு மலருக்காக 1985ல் எழுதியது)

கம்ப்யூட்டர் என்னும் சாதனமாம்
கணக்கை எளிதே தீர்த்திடுமாம்
சிக்கல்கள் பலவே இருந்தாலும்
சில நொடிகளிலே காட்டிடுமாம்
விடை தெரியாத வினாக்களுக்கும்
விரைவே விடையைத் தந்திடுமாம்
இந்நூற்றாண்டின் கலைச்செல்வம்
இனிதே இதனை வளர்ப்போமே!

Thursday, April 9, 2015

பொய் முகங்கள்

பொய் முகங்கள்.............................................

கவலையின்றி களிப்புடனே
துள்ளிக் குதித்து விளையாடிய
பள்ளி பருவ நாட்களிலே
மனதில் பட்டவற்றை
“பட்” டென சொல்லி விட்டேன்
தப்பாக நினைக்கவில்லை
பத்தாம் வகுப்பு நுழைந்தவுடன்
“பாடம் படிக்கவில்லை” என்று கூறும்
நான் பார்த்த நண்பர்களின்
முதல் “பொய் முகங்கள்”
முதன் முதலாய் கண்டேன் நான்
உற்ற நண்பர்களின்...........
பொய் முகங்களின்
உண்மையான தோற்றத்தை.................
உண்மையை மறைப்பதற்கு
உலகம் கொடுத்த பெயர்
“சாமர்த்தியம்”

சாமானியனின் உண்மை முகம்
சாமர்த்தியமாய் செயல்பட்டால்
கிடைக்கின்ற பரிணாமம்
“பொய் முகங்கள்”

உற்றாரும் மற்றாரும்
நண்பர்களும் நண்பிகளும்
உள்ள இந்த சமுதாயத்தின்
பொய்யான முகத்தைக் கண்டு
மனம் பொங்கியது........வெம்பியது.......

வறுமையிலே வெறுமையிலே
கடந்து வந்த இளமை நாட்கள்
பொய் முகத்தின் முகவரியை
இவ்வையகத்தில் காட்டியது.


’குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை”
என் தந்தை எனக்களித்த உபதேசம்
பொய் முகத்தை சகித்துக் கொள்ள
என் மனதைத் தயார் செய்த மூல மந்திரம்.

கல்லூரி வாழ்க்கையிலே
கள்ளமில்லா மனம் கொண்ட
நண்பர்கள் கிடைத்தமைக்கு
 நான் சொன்னேன் நன்றி கோடி
ஆத்மார்த்தமான அன்பின்
முகவரியே “உண்மை முகம்”

வேலையில்லா பட்டதாரி
வேலை தேடி அலைந்த்திட்டேன்
தேவையான தகுதிகளில்
அறிந்து கொண்டேன்
“பொய் முகமும்” ஒன்று என்று..........

முருகனுடைய திருவருளால்
முயற்சிகளின் பலனாக
முன்ணனி நிறுவனத்தில்
முதல் பணியில் சேர்ந்திட்டேன்.......

பதவிகளும் பல பெற்று
வாழ்க்கைத் தரம் முன்னேற
பல வண்ணக் கனவோடு
பணி நாளைத் துவங்கிட்டேன்.

புத்தம் புதிய சூழ் நிலையில்
நித்தம் ஒரு அனுபவம் தான்......
பொய் முகத்தின் குவியல்களில்
உண்மை முகம் புதைந்த்தனவே!

நெஞ்சு நிமிர்த்தி கருத்துச் சொன்னால்
 நஞ்சுமிழ்ந்த பொய் முகங்கள்
வஞ்சமில்லா எனது மனம் - நய
வஞ்சகத்தை புரிந்து கொள்ளாதது ஏனோ?

மெய் என்று பொய் முகத்தை
நம்பி நம்பி மனம் நொந்தேன்.....
உண்மைதனை உரக்க உரைத்ததினால்
ஊதியத்தில் உயர்வு இல்லை
ஊமையாகிப் போனேன் நான்............
பொருல் இல்லார்க்கு இவ்வுலகமில்லை
வள்ளுவன் வாக்கு சத்தியமன்றோ?
பொருளில்லா உலகத்தில்
உண்மை முகத்திற்கு மதிப்பு எங்கே? உயர்வு எங்கே?

வாழ்க்கை கல்வியிலே
உண்மை முகம் புதைத்துக் கொண்டு
பொய் முகத்தை மாட்டிக் கொள்ள
கற்கவில்லை.......கற்கவில்லை.......

அதனால் தான் இச்சமூகம்
“சிரிக்கின்ற வில்லன்” என்றும்
“புரட்சிக்கார குசும்பன்” என்றும்
”திமிர் பிடித்த வம்பன்” என்றும்
பட்டங்களைச் சூட்டியது.

 நொடிக்கொருதரம் பொய் முகத்தை
அடிக்கல்லாய் அணிந்திட்ட அனைவருமே
படிப்படியாய் முன்னேறும் காட்சியினால்
மடிந்த்ததுவோ? உண்மை முகம்
வடித்துக் கொண்டே கண்ணிரை...............


Tuesday, April 7, 2015

 நினைத்தேன் எழுதுகிறேன்................

கதை சொல்வது......கதை கேட்பது இந்த இரண்டுமே இன்றைய காலகட்டத்தில் மிகவும் அரிதாகிவிட்டது.  என்னுடைய சிறு வயதில் பாஸ்கர் அண்ணன் கதை சொல்வது தான் நினைவிற்கு வருகிறது.

ராணிமுத்து காமிக்ஸ் , ஒற்றைக்கண் மாயாவி,  அம்புலிமாமா, கோகுலம், இந்திரஜால் காமிக்ஸ், போன்ற புத்தகத்தில் வரும் கதைகள் மிகப் பிரபலம். இதில் ராஜா ராணி கதை, துப்பறியும் கதை, குடியானவன் கதை போன்ற கதைகள் அடங்கும்.

ஆனால் பாஸ்கர் அண்ணா சொல்லும் கதை மாதக் கணக்கில் செல்லும். அவர் கதை சொல்லும் பாங்கு, இனம் புரியாத சந்தோஷத்தையும் சுவாரஸ்யத்தையும் கொடுக்கும்.

 நாங்கள் சிறுவர் சிறுமியர் என்று பல வயதினரும் கதை கேட்கும் குழுவில் அடக்கம்.

சிறு வயது நினைவுகளை அசை போடுவதில் என்ன ஒரு புத்துணர்ச்சி..........