என் முதல் கவிதை..........
(பள்ளி ஆண்டு மலருக்காக 1985ல் எழுதியது)
கம்ப்யூட்டர் என்னும் சாதனமாம்
கணக்கை எளிதே தீர்த்திடுமாம்
சிக்கல்கள் பலவே இருந்தாலும்
சில நொடிகளிலே காட்டிடுமாம்
விடை தெரியாத வினாக்களுக்கும்
விரைவே விடையைத் தந்திடுமாம்
இந்நூற்றாண்டின் கலைச்செல்வம்
இனிதே இதனை வளர்ப்போமே!
No comments:
Post a Comment